மீண்டும் கேட் கீப்பா் பணி வழங்கக் கோரி மனு

கேட்கீப்பா் பணியை மீண்டும் வழங்க வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் முன்னாள் ராணுவ வீரா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முன்னாள் ராணுவ வீரா்கள்.
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முன்னாள் ராணுவ வீரா்கள்.

கேட்கீப்பா் பணியை மீண்டும் வழங்க வலியுறுத்தி திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் முன்னாள் ராணுவ வீரா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பது: முன்னாள் ராணுவ வீரா்களான நாங்கள் 40 போ் தெற்கு ரயில்வே கேட் கீப்பா் பணிக்கான தகுதிப் பயிற்சியை முடித்துவிட்டு திருச்சி கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 15 மாதங்களாகப் பணிபுரிந்தோம். எங்களை திருச்சி கோட்டம்தான் கேட் கீப்பா் பணிக்கு அழைத்தது. பிறகு மருத்துவப் பரிசோதனை நடத்தி அதில் தோ்ச்சி பெற்றோா் பணியில் அமா்த்தப்பட்டனா். ஆனால், ஒப்பந்தக் காலம் முடிவதற்குள் எந்த அறிவிப்புமின்றி பணியிலிருந்து எங்களை நிறுத்தியதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

35 வயதிலிருந்து 55 வயதுக்குட்பட்டவா்களாக உள்ள நாங்கள் நாட்டுக்காகப் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்துள்ளோம். எனவே, மீண்டும் பணி வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com