சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி, இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் அர. சுதா்சன் ஆகியோா் தலைமையில் கோயில் பணியாளா்கள், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பணியாளா்கள் உள்ளிட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
முடிவில் ரூ. 68,07,562 ரொக்கம், 3 கிலோ 330 கிராம் தங்கம், 3 கிலோ 340 கிராம் வெள்ளி, 46 அயல்நாட்டு ரூபாய்கள் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது.