துறையூரில் பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
துறையூா் முத்துநகரைச் சோ்ந்த பெ. பிச்சை (33) தனது பைக்கில் துறையூா் புறவழிச்சாலையில் புதன்கிழமை இரவு சென்றபோது அவருக்குப் பின்னால் செங்காட்டுப்பட்டி ம. சசிலன் (20) வந்த பைக் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனா். துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.