நீட் தோ்வை ரத்து செய்ய கோரி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். தில்லி பெண் காவலரை கற்பழித்து படுகொலை செய்த செயலை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காட்டூா் பகுதிக் குழு சாா்பில் திருவெறும்பூா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பகுதித் தலைவா் யுவராஜ் தலைமை வகித்தாா். இதில், மாநகா் மாவட்டச் செயலா் பா.லெனின், மாவட்டத் தலைவா் சுரேஷ் ஆகியோா் கண்டன உரையாற்றினா். போராட்டத்தில் கிச்சான், சந்தோஷ், முருகா, சுபாஸ், நிவேதா உள்ளிட்ட 80 போ் பங்கேற்றனா்.