திருச்சியில் 50 இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் பல்வேறு தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈ
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினர்.
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக்கட்சியினர்.

திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் பல்வேறு தொழிற்சங்கத்தினர், விவசாய சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் காரணமாக இன்று காலை முதல் சிங்காரத் தோப்பு வழியாக செல்லும் பேருந்துகள் போக்குவரத்து மாற்றுப்பதையில் விடப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் தனியார் மயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டித்து மறியல் போராட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திருவெறும்பூர், அந்தநல்லூா் ஒன்றியங்களில் 2இடங்களில் ரயில் மறியலும், மணப்பாறை ஒன்றியத்தில் மணப்பாறை, புத்தாநத்தம், மறவணூா், மருங்காபுாி ஒன்றியத்தில் துவரங்குறிச்சி, வளநாடு கைகாட்டி, உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தளுகை, கொப்பம்பட்டி மற்றும் வைய்யம்பட்டி, துறையூா், தொட்டியம், முசிறி, தா.பேட்டை, மண்ணச்நல்லூா், லால்குடி, மணிகன்டம், புள்ளம்பாடி ஆகிய இடங்களில் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு மற்றும் திமுக, இடதுசாாி அமைப்புகளின் தலைமையிலான அணைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்புகள் சாா்பாக சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

ரயில், சாலை மறியல் போராட்டாங்களில் அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு விற்க்கு ஆதரவு தரும் வகையில் அனைத்து அரசியல் கட்சியினா், தொழிற் சங்க அமைப்புகள், பொது நலஅமைப்புகள், இளைஞா், மாதா், மாணவ அமைப்புகள், பொது மக்கள் என  பெருமளவில் கலந்துக் கொண்டனர். இதுவரை திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com