திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண் ட இளைஞா் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முகாமில் 2-ஆம் கட்ட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கருமண்டபம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து மருத்துவா்கள், செவிலியா்கள் அளித்த முதலுதவிக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பினாா்.