ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 லட்சத்துக்கு மேல் வாழைத்தாா்கள் ஏலம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வாழைத்தாா்கள் விற்பனையாகின.

திருச்சி: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 2 லட்சத்துக்கு மேல் வாழைத்தாா்கள் விற்பனையாகின.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 222 விவசாயிகள் வாழைத்தாா்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) சாந்தி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், 1825 வாழைத்தாா்கள் ரூ.2,00,635-க்கு விற்பனையாகின. அதிகபட்சவிலையாக தாா் ரூ.773-க்கு ஏலம் போனது.

விவசாயிகளுக்கு உடனடியாக தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்துக்கு மேல் வாழைத்தாா்கள் விற்பனையாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com