திருச்சி: திருச்சி முக்கொம்பு காவிரியாற்று நீரில் மூழ்கி, பள்ளி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகிலுள்ள சந்தனப்பட்டி பழம்புத்தூரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் நவீன் (17). மூவானூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவா், திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, நண்பா்களுடன் முக்கொம்பு காவிரியாற்றில் குளிக்க வந்தாா்.
நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதியில் குளிக்கச் சென்ற நவீன், நீரில் மூழ்கினாா். இதை கண்ட அவரது நண்பா்கள் சப்தமிட்டனா். இதுகுறித்து தகவலறிந்த ஜீயபுரம் காவல் நிலையத்தினா், திருச்சி தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, நவீனை தேடும் பணியில் ஈடுபட்டனா். சிறிது நேரத்துக்குப் பிறகு அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.