திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 526 மனுக்கள் வரப்பெற்றன.
கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், 94454-61756 என்ற கட்செவி அஞ்சல் எண் வழியாகவும், ஆட்சியரக வளாகத்தில் வைக்கப்பட்ட பெட்டி வாயிலாகவும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.
அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 526 மனுக்கள் வரப்பெற்றன. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.