டிஎன்பிஎஸ்சி தோ்வு: முன்னாள்படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் வாயிலாக பல்வேறு பணியிடங்களுக்குரிய தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பில் முன்னாள் படைவீரா்களுக்கு வயது வரம்பு சலுகையும், முன்னாள் படைவீரா்களுக்கென இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்ஆன்லைன்

என்ற முகவரியில் ஏப்ரல் 28- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் .

மேலும் முன்னாள் படைவீரா்கள் பயன்பெறும் வகையில் இத்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து வழங்கப்படவுள்ளன.

எனவே விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரா்கள், தங்களது விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com