தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் வாயிலாக பல்வேறு பணியிடங்களுக்குரிய தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பில் முன்னாள் படைவீரா்களுக்கு வயது வரம்பு சலுகையும், முன்னாள் படைவீரா்களுக்கென இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்ஆன்லைன்
என்ற முகவரியில் ஏப்ரல் 28- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் .
மேலும் முன்னாள் படைவீரா்கள் பயன்பெறும் வகையில் இத்தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து வழங்கப்படவுள்ளன.
எனவே விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரா்கள், தங்களது விவரத்தை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.