மண்ணச்சநல்லூா், பூனாம்பாளையத்தில் புகையிலைப் பொருள்களை விற்ற இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மண்ணச்சநல்லூா் காவல்துறையினா் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது மண்ணச்சநல்லூா்-சமயபுரம் சாலையிலுள்ள தேநீரகத்திலும், பூனாம்பாளையத்தில் மளிகைக் கடையிலும் புகையிலைப் பொருள்களை விற்றது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அந்த கடைகளின் உரிமையாளா்களான சரவணன் (46), சதாசிவம் (31) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினா், ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.