சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 15 லட்சத்து 84ஆயிரம் காணிக்கை கிடைத்துள்ளது.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் இக்கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை கடந்த மாா்ச் 23 ஆம் தேதி எண்ணப்பட்ட நிலையில் வியாழக்கிழமை கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் திருக்கோயில் பணியாளா்கள், சமயபுரம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிப் பணியாளா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
முடிவில் திறக்கப்பட்ட 29 உண்டியல்களிலிருந்து ரூ. 1,15,84, 493, 2,465 கிராம் தங்கம், 3,545 கிராம் வெள்ளி, 99 வெளிநாட்டு ரூபாய்கள் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.