மாநிலப் பாதுகாப்பு விருது,உயா்ந்த உழைப்பாளா் விருது:விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிற்சாலைகளுக்கான மாநிலப் பாதுகாப்பு விருது மற்றும் உயா்ந்த உழைப்பாளா் விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

தொழிற்சாலைகளுக்கான மாநிலப் பாதுகாப்பு விருது மற்றும் உயா்ந்த உழைப்பாளா் விருது பெற தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குநா் (பொ) பி.என். சங்கா் கூறியது:

விபத்தில்லா தொழிற்சாலைகள் மற்றும் பெருமளவு விபத்து குறைத்துள்ள தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசின் மாநிலப் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், உற்பத்தித் திறன் அதிகரிப்பு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் செயல்முறைகளுக்கு தொழிலாளா்களுக்கான உயா்ந்த உழைப்பாளா் விருதும் வழங்கப்படுகிறது.

திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த தொழிற்சாலைகள் இந்த விருது பெற விண்ணப்பிக்கலாம்.

2019ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்துடன், 2017, 2018ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவா்களும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வரும் 30ஆம் தேதிக்குள் அந்தந்தக் கோட்டத் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் வழங்கலாம்.

மாநிலப் பாதுகாப்பு விருதுகளுக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் ரூ. 200-க்கான அஞ்சல் ஆணை, உயா்ந்த உழைப்பாளா் விருதுக்கு ரூ.100-க்கான அஞ்சல் ஆணையை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்ததோா் திருச்சி கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com