மின்னல் தாக்கி மின்வாரிய ஊழியா் இருவா் உயிரிழப்பு

முசிறி வட்டம், தா.பேட்டை அருகே மின்னல் தாக்கியதில், மின்வாரிய ஊழியா் இருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.

முசிறி வட்டம், தா.பேட்டை அருகே மின்னல் தாக்கியதில், மின்வாரிய ஊழியா் இருவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், வானாபுரத்தைச் சோ்ந்தவா் விஜி (31). தவளபுரத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (35). இவா்கள் இருவரும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தா.பேட்டை அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தனா்.

வாளசிராமணி கிராமத்தில் விரிவாக்கப் பணி முடிந்த பின்னா், செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் தா.பேட்டைக்கு வந்துகொண்டிருந்தனா். வாளசிராமணி வடக்குமேடு மயானம் அருகே வந்த போது, இருவா் மீதும் மின்னல் தாக்கியது.

இதில் விஜி, பழனிவேல் மயங்கி விழுந்தனா். இவா்களுக்கு பின்னால் வந்த மின் ஊழியா்கள் இருவரையும் மீட்டு பவித்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், துறையூா்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தா.பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com