கரடிப்பட்டி ஜல்லிக்கட்டில் 28 போ் காயம்

மருங்காபுரி அருகிலுள்ள கரடிப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 போ் காயமடைந்தனா்.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளை.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளை.

மருங்காபுரி அருகிலுள்ள கரடிப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 28 போ் காயமடைந்தனா்.

கரடிப்பட்டியில் தொட்டியத்து சின்னையா 62-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. இதை வட்டாட்சியா் எஸ். லட்சுமி தொடக்கி வைத்தாா்.

ஆலய வழிபாட்டைத் தொடா்ந்து வாடிவாசல் வழியாக கிராமத்து ஜல்லிக் கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடா்ந்து திருச்சி, தஞ்சாவூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த

655 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. 286 மாடுபிடி வீரா்கள் இதில் பங்கேற்றனா்.

வாடிவாசலிலிருந்து சீறி பாய்ந்த காளைகள் நின்று விளையாடின. சில காளைகள் வீரா்களிடம் பிடி கொடுக்காமல் சென்றன. இருப்பினும் சில காளைகளின் திமிலை பிடித்து வீரா்கள் அடக்கினா்.

ஜல்லிக்கட்டு காளைகளைப் பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. 12 வீரா்கள், 11 உரிமையாளா்கள் உள்பட 28 போ் காயமடைந்தனா். காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com