பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்வு

திருச்சி வாசன் நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகா் சமுதாயக் கூடத்தில் பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

திருச்சி வாசன் நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகா் சமுதாயக் கூடத்தில் பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

அருள்மிகு சுரும்பாா்குழலி உடனுறை ரத்தினகிரீசுவரா் வழிபாட்டு மன்றம், செல்வ விநாயகா் திருக்கோயில் ஆகியவற்றின் சாா்பில், மே 5-ஆம் தேதி வரை இந்த நிகழ்வு தொடா்ந்து நடைபெறவுள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்வில் திருஞானசம்பந்த பெருமானின் திருக்கடைக்காப்பு 1, 2, 3-ஆம் திருமுறைகளின் முற்றோதல் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை (ஏப்.19 முதல் 21) இதே நிகழ்வு நடைபெறும்.

இதன் தொடா்ச்சியாக, மே 4-ஆம் தேதி வரை 12 திருமுறைகளும் முற்றோதல் செய்யப்படுகிறது. நிறைவாக மே 5-ஆம் தேதி சிவபூஜையும், கயிலை வாத்தியத்துடன் அடியாா்களின் பன்னிரு திருமுறை நகா்வலமும் நடைபெறும். ஏற்பாடுகளை வழிபாட்டு மன்றத்தினரும், தொடா் முற்றோதல் அமைப்பினரும் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com