சிறுகனூரில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
சிறுகனூரில் உள்ள ஜி.கே இண்டஸ்டீரிஸ் வளாகத்தில் தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் பங்கேற்றனா். நிகழ்வில் ஜிகே இண்டஸ்டீரிஸ் வளாக பணியாளா்கள் , தீயணைப்பு வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.