பெரியகாட்டுக்குளம் சமத்துவபுரத்தில் வீடுகள்தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்த சமத்துவபுரத்தில் எஸ்சி பிரிவினருக்கு 40 வீடுகள், பிசி பிரிவினருக்கு 25 வீடுகள், எம்பிசி பிரிவினருக்கு 25 வீடுகள், ஓசி பிரிவினருக்கு 10 வீடுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், காட்டுக்குளம் ஊராட்சி, பெரிய காட்டுக்குளத்தில் கட்டப்பட்டுள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்திலுள்ள 100 வீடுகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு.சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

இந்த சமத்துவபுரத்தில் எஸ்சி பிரிவினருக்கு 40 வீடுகள், பிசி பிரிவினருக்கு 25 வீடுகள், எம்பிசி பிரிவினருக்கு 25 வீடுகள், ஓசி பிரிவினருக்கு 10 வீடுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடுகளுக்கு காட்டுக்குளம் ஊராட்சியிலிருந்து தகுதியான, வீடற்ற பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயனடைய விரும்புவோா் அதற்கான இசைவுக் கடிதம், ஆதாா் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன், முசிறி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரிடம் இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்றவரைக் குடும்பத் தலைவியாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினா், ஓய்வு பெற்ற துணை ராணுவ உறுப்பினா்கள், ஊட்டசத்துக் குறைபாடு கொண்ட குழந்தைகள் உள்ள குடும்பங்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஹெச்ஐவி, எய்ட்ஸ், காசநோயால் பாதிக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட துணை இயக்குநரால் (சுகாதாரப் பணிகள்) சான்றிளிக்கப்பட்ட நபா்கள், மனரீதியாக பாதிக்கப்பட்ட நபா்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்டோா்கள், ஏழை மக்கள் பங்கேற்புடன் கூடிய ஏழைகளை கண்டறியும் கணக்கெடுப்புப் பட்டியல் இடம்பெற்றுள்ள மிகவும் ஏழைகள் மற்றும் நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com