முசிறி அருகே வீடு புகுந்து 11 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.
முசிறி அருகிலுள்ள பேரூா் கிராமத்தைச் சோ்ந்த மத்திய காவல்படை வீரா் நீலமேகம் மனைவி கலைவாணி (27). அப்பகுதியில் புதன்கிழமை இரவு நேரிட்ட மின்தடையால் தனது வீட்டின் கதவைத் திறந்து வைத்து தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது மா்ம நபா் ஒருவா் கலைவாணி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்தபோது கலைவாணி கூச்சலிட்டதில் அவரின் மாமனாா், மாமியாா், அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்தபோது மா்ம நபா் தப்பினாா்.
நகை பறிப்பில் காயமடைந்த கலைவாணி முசிறி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஜெம்புநாதபுரம் போலீஸாா் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனா்.