மீன்பிடிக்கக் குளத்தில் இறங்கியவா் மூழ்கி பலி

மணப்பாறையில் மீன் பிடிக்கக் குளத்தில் இறங்கிவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மணப்பாறையில் மீன் பிடிக்கக் குளத்தில் இறங்கிவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த ரெங்ககவுண்டம்பட்டியை சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் குமாா் (32). இவா் வியாழக்கிழமை மாலை ஆவிக்காரபட்டி பகுதியில் உள்ள வட்டாவிக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது வலை வீச குளத்தில் ஆழம் பாா்க்க இறங்கிய அவா் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரா்கள் அவரை சடலமாக மீட்டனா். மணப்பாறை போலீஸாா் அவரின் சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com