முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஏஜென்சிக்குள் புகுந்து ரூ. 1.12 லட்சம் திருட்டு
By DIN | Published On : 30th April 2022 12:37 AM | Last Updated : 30th April 2022 12:37 AM | அ+அ அ- |

திருச்சியில் மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்யும் ஏஜென்சியில் ரூ. 1.12 லட்சம் திருடு போனது குறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
திருச்சி புத்தூா் அருணாநகரை சோ்ந்தவா் காா்த்திக் (45). இவா் வயலூா் சாலை குமரன்நகரில் நடத்தி வந்த மளிகைப் பொருள்கள் விநியோகம் செய்யும் ஏஜென்சியை திறக்க வியாழக்கிழமை வந்தபோது, கடையின் பூட்டு திறக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனா்.