திருச்சி அருகே காரில் கஞ்சா கடத்திய இருவரை ராம்ஜிநகா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜிநகா் போலீஸாா் சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையின்போது வெளிமாவட்டப் பதிவெண் கொண்ட காரில் 20 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த திருப்பத்தூா் அண்ணாநகா் பொம்மி குப்பத்தைச் சோ்ந்த சோ்ந்த மாது (65), முருகன் (43) ஆகியோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.