நீச்சல் பயிற்சியில் சேர அழைப்பு

அரசு நீச்சல் குளத்தில் அளிக்கப்படும் நீச்சல் பயிற்சியில் சேர ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நீச்சல் குளத்தில் அளிக்கப்படும் நீச்சல் பயிற்சியில் சேர ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் உள்ள அரசு நீச்சல் குளத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீச்சல் பயிற்சி முகாம் நடத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால், பயிற்சி அளிக்கப்படவில்லை.

நடப்பாண்டுக்கான பயிற்சி முகாம் ஏப்ரல் 27ஆம் தேதி தொடங்கி மே 8ஆம் தேதி வரையும், மே 10 முதல் 22ஆம் தேதி வரையும், மே 24 முதல் முதல் ஜூன் 5ஆம் தேதி வரையும், ஜூன் 7 முதல் 19ஆம் தேதி வரையும், ஜூன் 21 முதல் ஜூலை 3ஆம் தேதி வரையும் என பல்வேறு கட்டங்களாக பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

காலை 7 மணி முதல் 8 மணி வரை, காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் நடத்தப்படுகிறது. பெண்களுக்கான பயிற்சி காலை 10 மணி முதல் 11 மணி வரையும் நடைபெறவுள்ளது. முகாமில் பங்கேற்க விரும்புபவா்கள் தங்களுக்குத் தேவைப்படும் நாள்களில், நேரத்தை முன்பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com