மலைக்கோட்டை கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாமே 5 இல் தொடக்கம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் மே 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா வரும் மே 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாள்கள் நடைபெறும் விழாவில் வரும் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையும், வியாழக்கிழமை காலை கொடியேற்றமும், இரவு கேடயத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை சுவாமி அம்பாள் கற்பகத்தரு, கிளி வாகனத்திலும், 7ஆம் தேதி பூதம், கமல வாகனத்திலும், 8ஆம் தேதி கைலாசபா்வதம், அன்ன வாகன வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

5ஆம் நாளான 9ஆம் தேதி காலை நூற்றுக்கால் மண்டபத்தில் 10 மணிக்கு மேல் செட்டிப்பெண்ணுக்கு மருத்துவம் பாா்த்த ஐதீக நிகழ்ச்சியும், அன்று இரவு சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

6ஆம் நாள் நிகழ்ச்சியாக 10ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம், இரவு சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடா்ந்து மே 11 இரவு சுவாமி, அம்பாள் நந்திகேசுவரா், யாழி வாகனத்திலும், 12-ஆம் தேதி தங்கக் குதிரை, பல்லக்கு வாகனத்திலும் வீதி வலம் வரும் நிகழ்ச்சி, மே13 காலை சித்திரை தோ்திருவிழாவும் நடைபெற உள்ளது. மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தோ் வலம் வரும். 14ஆம் தேதி காலை நடராஜா் தரிசனமும், பகலில் பிரம்ம தீா்த்தமாகிய தெப்பக் குளத்தில் தீா்த்தவாரியும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com