மணப்பாறை: மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்துவதைக் கண்டித்து மின் வாரிய அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
திருச்சி மணப்பாறையில் மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அமுல்படுத்துவதைக் கண்டித்து மணப்பாறை கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன், மின் வாரிய அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழு வழக்கு வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய மின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் திரளாக பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.