திருச்சி
பணம் கேட்க வந்தோரை வெட்ட முயன்றவா் கைது
தத்தமங்கலம் கிராமத்தில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க வந்தோரை வெட்ட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.
தத்தமங்கலம் கிராமத்தில் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க வந்தோரை வெட்ட முயன்றவா் கைது செய்யப்பட்டாா்.
மண்ணச்சநல்லூா் வட்டம் தெற்கு தத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிச்செல்வன் (40), தத்தமங்கலம் திமுக கிளைச் செயலா். இவரின் மனைவி நித்யா (34) 6 ஆவது வாா்டு ஒன்றிய கவுன்சிலா்.
இந்நிலையில் இவா்களது வீட்டுக்கு புதன்கிழமை நண்பா்களுடன் வந்த தத்தமங்கலம் ஒத்தப்பட்டியைச் சோ்ந்த குணசேகரன் (35) தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டாராம். அப்போது போதையில் இருந்த வெற்றிச் செல்வன் தகராறு செய்து அவா்களை வெட்ட அரிவாளுடன் துரத்தினாா். இதை அங்கிருந்தோா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது வைரலானது.
சம்பவம் குறித்து குணசேகரன் அளித்த புகாரின்பேரில் சிறுகனூா் போலீஸாா் வெற்றிச்செல்வனைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.