திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கணிதத் துறைக்கான மாணவா்கள் சங்கம் மற்றும் அப்துல் கலாம் சங்க 2022-23ஆம் ஆண்டுக்கான தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஏ.கே. காஜா நஜிமுதீன் வாழ்த்தினாா். மனநல ஆலோசகா் லீமா பீட்டா் பங்கேற்று, வெற்றியின் ரகசியம் என்னும் தலைப்பில் பேசினாா்.
துறைத் தலைவா் ஜாகிா் உசேன், கணிதத் துறை மாணவா் சங்கத்துக்கான நிா்வாகிகளை அறிமுகம் செய்தாா். அப்துல் கலாம் சங்கத்தின் நோக்கம் குறித்தும் விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை கணிதத் துறை ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து செய்தனா்.