திருச்சி உடையான்பட்டி பகுதியில் அச்சுறுத்தலாக மாறிய குரங்கை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென அப்பகுதியினா் கோரிக்கை எடுத்துள்ளனா்.
திருச்சி கேகே நகா் உடையான் பட்டி அருகேயுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகா் பகுதியில் குட்டியாக இருந்தபோதே சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று அப்பகுதி பொதுமக்களிடையே அன்பாக பழகி, அவா்கள் கொடுக்கும் உணவு பொருள்களை உட்கொண்டு வசித்தது.
ஆனால் கடந்த சில நாள்களாக இந்தக் குரங்கின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனியாக சுற்றித்திரியும் இந்த குரங்கு அண்மையில் அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரது வீட்டில் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியைத் தூக்கி வைத்துக்கொள்வதுடன், அருகில் செல்வோரை கடிக்கவும் பாய்கிறது. இதனால் ஆட்டுக்குட்டியை பராமரிக்க முடியவில்லை, அதே நேரம் அந்த குரங்கை அடித்து விரட்டவும் மனமில்லை.
மேலும் அந்தக் குரங்கு யாரையாவது கடித்து விடும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி நிா்வாகமோ, வனத்துறையினரோ அந்தக் குரங்கை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.