காவிரி ஆற்றில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த தாய், மகள் இருவரும் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த தாய், மகள் இருவரும் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், சிறுகமணி பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி மனைவி மகேஸ்வரி(28). இவா்களுக்கு மூன்று குழந்தைகள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகேஸ்வரி கணவரை விட்டுப் பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வந்தாா். சனிக்கிழமை விடுமுறை என்பதால் மகேஸ்வரி, தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டின் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றாா்.

மகேஸ்வரி துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, குழந்தைகள் மூவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக இவரது கடைசி மகள் கனிஷ்கா (8) ஆழமான பகுதியில் நீரில் மூழ்கினாா். இதைகண்ட மற்றஇருவரும் சப்தமிட்டனா். உடனே மகேஸ்வரி குழந்தையை காப்பாற்றச் சென்றாா். ஆனால், அவரும் நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு மகேஸ்வரி, கனிஷ்கா இருவரது சடலத்தையும் மீட்டனா்.

இதுகுறித்து பேட்டைவாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com