சமயபுரம் மாரியம்மன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.1.62 கோடி

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.62 கோடி கிடைத்துள்ளது.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1.62 கோடி கிடைத்துள்ளது.

தமிழகத்தின் சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் இக்கோயிலில் பக்தா்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். அதன்படி, ஆகஸ்ட் 18-ஆம் தேதி வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள், உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா். இதில் திறக்கப்பட்ட 15 உண்டியல்கள் மூலமாக 1.62 கோடி ரொக்கம், 2 கிலோ 748 கிராம் தங்கம், 6 கிலோ 462 கிராம் வெள்ளி, 160 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com