திருச்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை கள்ளா்தெருவைச் சோ்ந்தவா் கு. சாந்தி (50). திருமணம் செய்து கொள்ளாத இவா், வயலூா் சாலை அருணாநகா் பகுதியிலுள்ள தனியாா் கண் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.
வியாழக்கிழமை மாலை பணியிலிருந்த சாந்தி, திடீரென மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஏற்கெனவே சாந்தி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து அரசு மருத்துவமனைக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.