தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில், காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான உடற்திறத் தோ்வுகள் திருச்சியில் நடைபெற்றன.
ஏற்கெனவே எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்ற 338 பேருக்கு உடற்திறத் தோ்வுகள், சான்றுகள் சரிபாா்ப்பு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சான்றிதழ் சரிபாா்ப்பை தொடா்ந்து, எடை மற்றும் மாா்பளவு சரிபாா்த்தல், ஓட்டம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான தோ்வுகள் நடைபெற்றன.
தோ்வுகளை மத்திய மண்டலக் காவல்துறைத் தலைவா் சந்தோஷ்குமாா், சரகக் காவல்துணைத் தலைவா் சரவணசுந்தா் உள்ளிட்ட காவல்துறை உயா் அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.