துவரங்குறிச்சியில் வியாழக்கிழமை 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
துவரங்குறிச்சி கடைவீதி மதுக்கடை அருகே துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் செல்லப்பா, தனிப்பிரிவு காவலா் ராமகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்ற காமன் கோயில் தெருவை சோ்ந்த அ. அப்துல்வாகித் (20) தப்பியோடினாா். இதையடுத்து அவரது வீட்டுக்குச் போலீஸாா் சென்று அங்கிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். தப்பிய அப்துல்வாகித்தை தேடுகின்றனா்.