அதேபோல, காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையிலும் பக்தா்கள் பல்வேறு பரிகார வழிபாடுகளில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டதால், ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீா் ஓடியது. இதனால், பக்தா்கள் நீராட ஆழமான பகுதிக்குச் சென்றனா். பவானி போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.