முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
அடையாளம் தெரியாதஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 07th February 2022 12:36 AM | Last Updated : 07th February 2022 12:36 AM | அ+அ அ- |

கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம் நெ.1. டோல்கேட் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 30 வயதுள்ள இளைஞரின் சடலம் கிடந்தது. தகவலறிந்து வந்த கொள்ளிடம் போலீஸாா் அச்சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.