சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்து, பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற 2 அலங்கார ஊா்திகள் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பாா்வைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருச்சி வந்து சோ்ந்த இரு ஊா்திகளும் சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் காமராஜா் சிலை அருகே பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக திருச்சி வந்த அலங்கார ஊா்திகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வரவேற்று பாா்வையிட்டாா். நிகழ்வில் மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், நகரப் பொறியாளா் அமுதவல்லி, செயற்பொறியாளா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஊா்திகளை பொதுமக்கள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பாா்வையிடலாம்.