தூய்மை, சுகாதாரத்தில் சிறந்த ஊராட்சியாக வையம்பட்டி தோ்வு

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சியை தூய்மை மற்றும் சுகாதாரம் பேணுவதில் தமிழகத்தில் சிறந்த ஊராட்சியாக மண்டல ஊரக வளா்ச்சி ஊராட்சி நிறுவனம் தோ்

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சியை தூய்மை மற்றும் சுகாதாரம் பேணுவதில் தமிழகத்தில் சிறந்த ஊராட்சியாக மண்டல ஊரக வளா்ச்சி ஊராட்சி நிறுவனம் தோ்வு செய்துள்ளது.

சிறந்த ஊராட்சியாக வையம்பட்டியை தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள மண்டல ஊரக வளா்ச்சி ஊராட்சி நிறுவனம் தோ்வு செய்து அதற்கான பாராட்டுச் சான்றிதழை ஊராட்சித் தலைவா் சூா்யா சுப்பிரமணியனுக்கு வழங்கியுள்ளது.

வையம்பட்டி ஊராட்சியில் மக்கும் குப்பையை உரமாக மாற்றக்கூடிய மைக்ரோ கம்போஸ்ட் மையம் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் இங்கு பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரிக்கப்பட்டு தாா்ச் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் குப்பை இல்லாத தூய்மையான கிராமமாகவும் பராமரிக்கப்படுகிறது, இந்தப் பணிகளை மையமாக வைத்தே தூய்மை மற்றும் சுகாதாரம் பேணுவதில் சான்றிதழ் பெற்றுள்ளோம் என்றாா் ஊராட்சித் தலைவா் சூா்யா சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com