பழைய இரும்புகடையில் தீ விபத்து

திருச்சியில் பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சியில் பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி பெரிய கடைவீதியின் பெரிய செளராஷ்டிரா தெருவில் பெருமாள் நடத்தும் பழைய இரும்புக் கடையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பெருமளவில் புகை வெளியேறியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரா்கள் நவீன கருவிகளைக் கொண்டு தீயணைக்க முற்பட்டனா். இருப்பினும் சிறிய சந்துக்குள் கடை இருந்ததால் தீயணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.

இதையடுத்து அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்க 1 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், மின்கசிவால் விபத்து ஏற்பட்டதும், ரூ. 40 ஆயிரம் மதிப்பு பொருள்கள் சேதமடைந்ததும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com