துறையூா் அருகே அனுமதியின்றி மண் அள்ளியதாக மூவரை கைது செய்த போலீஸாா் அவா்கள் பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.
நாகலாபுரம் ஆதிதிராவிடா் சுடுகாடு அருகேயுள்ள குட்டையில் சனிக்கிழமை இரவு அனுமதியின்றி மண் அள்ளுவது தெரிந்து துறையூா் போலீஸாா்அந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது அனுமதியின்றி குட்டை மண் அள்ளிய ஜேசிபி மற்றும் 2 டிராக்டா்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜேசிபி உரிமையாளா் கீழகுன்னுபட்டி பெ. சாமிராஜா(38), டிராக்டா் உரிமையாளா் நாகலாபுரம் ரா. அருண்பாபு, ஓட்டுநா் ரா. சங்கா்(33) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தப்பிச் சென்ற மற்றொரு டிராக்டா் உரிமையாளா் ரெ. ஜெகதீசனை தேடுகின்றனா்.