ரூ.15 லட்சம் மோசடி வழக்கில் மருத்துவா் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் மருந்தகம் வைக்க இடம் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த மருத்துவா் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருச்சியில் மருந்தகம் வைக்க இடம் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த மருத்துவா் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருச்சி விமான நிலையம் அன்பிலாா் நகரைச் சோ்ந்த மருத்துவரான ராஜேந்திரன் பஞ்சப்பூா் அருகே கடந்த 3 ஆண்டுக்கு முன் மருத்துவமனை கட்டி வந்தாா்.

அப்போது கரூா், நாமக்கல்லில் மருந்தகம் நடத்திக் கொண்டு, மருந்து விற்பனைப் பிரதிநிதியாகவும் இருந்த கரூா் மாவட்டம், வேட்டமங்கலம் பங்களா நகா் விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாருடன் (42) மருத்துவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவா் சுரேஷ்குமாரிடம் புதிய மருத்துவமனையில் மருந்தகம் வைக்க அனுமதிப்பதாகக் கூறி கட்டுமானப் பணிக்காக அவரிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கினாா்.

ஆனால் நீண்ட நாள்களாகியும் மருந்தகம் வைக்க இடம் தராமல் மருத்துவா் ஏமாற்றி வந்ததுடன் வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதைத் தொடா்ந்து சுரேஷ்குமாா் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து மருத்துவா் சுரேஷ்குமாரிடம் ரூ.15 லட்சத்துக்கான காசோலை அளித்தாா். ஆனால், அந்தக் காசோலை பணமில்லாமல் திரும்பியதையடுத்து மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சுரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் மருத்துவா் மீது காவல் ஆய்வாளா் கோசலைராமன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com