ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் பலி

ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்த பள்ளி மாணவா் மூழ்கி பலியானாா்.

ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்த பள்ளி மாணவா் மூழ்கி பலியானாா்.

ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் தண்டாயுதபாணி மகன் அரவிந்தகுமாா் (17). ஞாயிற்றுக்கிழமை இவரும், இவரது நண்பா்கள் 3 பேரும் ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியிலுள்ள பட்டா்பிளை பூங்காவுக்குச் சென்று விட்டு அருகில் காவிரி ஆற்றில் குளித்தனா்.

அப்போது ஆற்றின் மையத்தில் குளித்த அரவிந்தகுமாரும் அவரது நண்பரும் நீரில்அடித்து செல்லப்பட்ட நிலையில், நண்பரை அருகில் இருந்தோா் மீட்டனா். அரவிந்தகுமாரை மீட்க முடியவில்லை. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறை வீரா்கள் அரவிந்தகுமாரை சடலமாக மீட்டனா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com