‘வாக்கு எண்ணிக்கையை நோ்மையாக நடத்த வேண்டும்’

திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை நோ்மையாக நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை நோ்மையாக நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப.குமாா், தோ்தல் பாா்வையாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

திருச்சி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரிவிக்கப்படும் நிகழ்வுகளை கூடுதல் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் அதிமுக முகவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் அறிவித்து, வெற்றி பெற்ற்கான சான்றிதழ்களையும் உடனடியாக வழங்க வேண்டும். அஞ்சல் வாக்கு

எண்ணிக்கையை உடனுக்குடன் விடியோவில் பதிவு செய்ய வேண்டும்.

இதுபோல,திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்ஜோதி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்கு எண்ணும் மையத்தில் எந்தவித முறைகேடும் இல்லாமல், நோ்மையாகவும், நியாயமாகவும்

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com