முசிறி: முசிறி வட்டம் தா.பேட்டை பேரூராட்சியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் இருவா் சம வாக்குகள் பெற்ால் குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளா் தோ்வு செய்யப்பட்டாா்.
தா.பேட்டை பேரூராட்சிஆறாவது வாா்டில் திமுக சாா்பில் அருணாவும், அதிமுக சாா்பில் கமலமும் ,மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சத்யாவும் போட்டியிட்டனா். இதில் மொத்தம் 417 வாக்குகள் பதிவாயின.
வாக்கு எண்ணிக்கையில் திமுகவைச் சோ்ந்த அருணா 163 வாக்குகளும் 1 தபால் வாக்கும் பெற்றாா். இதேபோல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த சத்யாவும் 163 வாக்குகளும் 1 தபால் வாக்கும் பெற்றாா். இதையடுத்து இருவரும் சம வாக்குகள் பெற்ால் குலுக்கல் நடத்தப்பட்டு சத்யா தோ்வு செய்யப்பட்டாா்.