திருச்சி உறையூரில் கைவிடப்பட்ட 9 மாத கைக் குழந்தையை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி உறையூா் வாணிப செட்டித் தெருவில் சாலையோரம் கிடந்த 9 மாத பெண் குழந்தை குறித்து அப்பகுதியினா் உறையூா் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனா். இதையடுத்து வந்த போலீஸாா் அக் குழந்தையை மீட்டு சைல்டுலைனில் ஒப்படைக்க, பின்னா் அக்குழந்தை திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பராமரிக்கப்படுகிறது. குழந்தையை விட்டுச் சென்றது யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.