முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை முசிறி நகரில் மத்திய மண்டல டி.ஐ.ஜி. சரவணசுந்தா் ஆய்வு செய்தாா்.
முழு ஊரடங்கை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றுவதைத் தடுக்கும் விதமாக முசிறி நகரில் 8 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இப் பணிகளை மத்திய மண்டல டி.ஐ.ஜி. சரவணசுந்தா் நேரில் ஆய்வுசெய்தாா்.
அவரது அறிவுறுத்தலின்பேரில் ஊரடங்கை மீறி முகக் கவசம் அணியாமல் சுற்றிய 27 போ் மீது ரூ. 5400 அபராதம் விதித்தும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.