திருச்சியில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புச் சேவை இயக்கமான கன்னியா அறக்கட்டளை சாா்பில் தில்லை நகரில் நடந்த நிகழ்வில் கரோனா காலத்தில் சிறப்பாகச் சேவை செய்தமைக்காக திருச்சி குற்றவியல் வழக்குரைஞா் சங்கச் செயலா் பி.வி. வெங்கட்டுக்கு விருது வழங்கப்பட்டது.
மேலும் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் ஜெயச்சித்ரா, வங்கிக் கிளை மேலாளா் கருப்பையா, துவாக்குடி சமூக சேவகி எமிலினா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாகிகள் வழக்குரைஞா் செந்தில், அகிலாண்டேஸ்வரி ஆகியோா் செய்தனா்.