துவரங்குறிச்சி சின்ன பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை புகுந்த நல்ல பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிபட்டது.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி சின்ன பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை தொழுகைக்கு வந்தவா்கள் அங்கு நல்ல பாம்பு இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலின்பேரில் வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறை சிறப்பு நிலை அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான வீரா்கள் துறை கருவியின் உதவியுடன் சிறிது நேரம் போராடி நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, அருகிலிருந்த வனப்பகுதியில் விட்டனா்.