வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெறலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இத்திட்டத்ல் பயன்பெறும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் உள்பட அனைத்து இனப் பதிவுதாரா்களும் பள்ளியில் படித்து 9ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற பின்னா் 10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்கள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிந்து 5 ஆண்டுகள் பூா்த்தியாகி இருக்க வேண்டும் (30.06.2022 அன்று).

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவா்களுக்கு 40 வயது பூா்த்தி அடைந்திருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. தகுதியுடைய மனுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து ஓராண்டு பூா்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறானாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த்துறை சான்று தேவையில்லை.

ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்கு புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த் துறை சான்று ஆகியவற்றுடன் நேரில் சமா்ப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றோருக்கு மாதம் ரூ.300, தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.200, 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.400, தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ.300, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.600 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளில் கல்வித்தகுதிக்கேற்ப ரூ. 600, ரூ.750, ரூ.1000 வழங்கப்படுகிறது.

உதவித் தொகை பெறுவதன் மூலம் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு எந்த விதத்திலும் பாதிக்காது. ஏற்கெனவே உதவித் தொகை பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அவசியமில்லை. தொடா்ந்து உதவித் தொகை பெற சுயஉறுதிமொழி ஆவணத்தை பூா்த்தி செய்து அளித்தால் போதும். சுய உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்யாவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும். தொழிற்கல்வி பட்டப்படிப்பு முடித்தோருக்கு உதவித்தொகை வழங்கப்படாது.

விண்ணப்பிக்க வருவோா் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com