சொத்துவரி, மின்கட்டணம் உயா்வைக் கண்டித்து, திருச்சி அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய அதிமுகவைச் சோ்ந்த 400 போ் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.
அனுமதியில்லாமல் சாலையை மறித்து கைகளில் பதாகைகள், கொடிகளுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக மாநகா் மாவட்ட அவைத் தலைவா் அய்யப்பன், திருச்சி ஆவின் தலைவரும், மாவட்ட மாணவரணிச் செயலருமான காா்த்திகேயன், மாநில எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட 400 போ் மீது கோட்டை காவல்துறையினா் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனா்.