திருச்சி அருகே கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 5 போ் கைது

திருச்சி அருகே காவல்துறையினரின் சோதனையில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி அருகே காவல்துறையினரின் சோதனையில் கள்ளநோட்டு கும்பலைச் சோ்ந்த 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், வாழ்மால்பாளையம் மேலூா் பகுதியிலுள்ள வீட்டில் கள்ள நோட்டு தயாரித்து வருவதாக, காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், ஆய்வாளா் செந்தில்குமாா், ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பரவாசுதேவன் , மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை வாழ்மால்பாளையம் மேலூா் சென்று, தா்மராஜ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா்.

அப்போது அந்த வீட்டிலிருந்து ரூ.1.25 லட்சத்தை பறிமுதல் செய்தனா். அந்த பணத்தை காவல்துறையினா் சோதனை செய்த போது, அவை கள்ளநோட்டுகள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து தா்மராஜ், ஸ்ரீரங்கம் அருண்குமாா் (40), சிந்தாமணி குணா (24) ஆகிய மூவரையும் காவல்துறையினா் பிடித்து விசாரித்தனா். இந்த விசாரணையில் மூவரும் கள்ள நோட்டு அடித்து, புழக்கத்தில் விட முயற்சித்தது தெரிய வந்தது.

இவா்களிடம் கிடைத்த தகவலைத் தொடா்ந்து திருச்சி பழைய மதுரைசாலை கீரப்பநாயக்கா் தெரு ஹ. அருண்குமாா் (24), புதுக்கோட்டை மாவட்டம், நக்கீரா்வயல் சு. மதன்குமாா் (21) ஆகிய இருவரையும் பிடித்தனா்.

மேலும் இவா்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்கள் இருவரும் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் பணியை மேற்கொண்டு வந்தனா்.

இதைத் தொடா்ந்து 5 பேரையும் கைது செய்த காவல்துறையினா், கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்திய கணினி, ஸ்கேனா் மற்றும் 2 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com